Yield Of Righteousness | நீதியின் விளைச்சல் | தமிழ் தேவ செய்தி | முனைவர். இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon

Message Title / தேவ செய்தி தலைப்பு : Yield Of Righteousness | நீதியின் விளைச்சல்

Message Language / தேவ செய்தி : தமிழ்

Message Date / தேவ செய்தி நாள் : 07 March 2021 | 07 மார்ச் 2021

Pastor / போதகர் : Pr. Robert Simon / முனைவர். இராபர்ட் சைமன்

Yield Of Righteousness | நீதியின் விளைச்சல் | தமிழ் தேவ செய்தி | முனைவர். இராபர்ட் சைமன் | Tamil Message | Pr. Robert Simon

Bilingual Message – English and Tamil Message – தமிழ் மாற்றும் ஆங்கில தேவ செய்தி:

 

நாள் : 07. 03.2021.
தலைப்பு : நீதியின் விளைச்சல் – 1
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்

தினந்தோறும் நமது சபை அலுவலகத்தில், நாங்கள் தேவனை துதித்து ஆராதிப்பதுண்டு. அப்படியாக, கடந்த வாரத்தில் ஒருநாள், நாங்கள் ஆராதிக்கும் போது, தசமபாகத்தை குறித்து பேசினோம். அன்று முதற்கொண்டு, நமது சபையில், இதைக் குறித்து பேசும் படியான ஒரு பாரம் எனக்குள் ஏற்பட்டது.

ஆவிக்குரிய ரீதியில் அது எப்படி செயல்படுகிறது?
அறிவியல் ரீதியில் அது எப்படி செயல்படுகிறது?

எங்களுடைய வாழ்க்கையில் சாட்சியின் படி கர்த்தருக்கென்று நாங்கள் செய்ததினால் இன்று வரை ஒரு குறைவும் காணப்படவில்லை. கர்த்தர் எங்களை இடம் கொள்ளாமல் போகும் மட்டும் ஆசீர்வதித்தார். தசமபாகத்தை குறித்து வேதாகமத்தில், முதலாவது

ஆதியாகமம் 14: 20 கூறுகிறது
…… இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

இங்கே முதன்முதலாக மெல்கிசேதேக்கு, ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான் என்று பார்க்கிறோம்
இரகசிய வருகை, ஞானஸ்நானம் என வேதத்தில் உள்ளவற்றை குறித்து அநேக கருத்துக்கள் உண்டு. வேதமும் அங்கீகாரம் பெற்றது.

வேதத்தின்படி அங்கீகரிக்கப்பட்டது எது?
வேதத்தின்படி அங்கீகரிக்கப்படாதது எது?

என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது வெளியரங்கமாக வேண்டுமெனில் மார்க்கபேதங்கள் இருக்க வேண்டும். அது நல்லது.

தசமபாகத்தை குறித்து ஒரு வரலாற்றுப் பார்வையில் 12 குறிப்புகளை குறித்து நாம் பார்க்கலாம்.

  • பண்டைய நாட்களில்
  • முற்பிதாக்களின் வாழ்க்கையில்
  • நியாயப்பிரமாணத்தில்
  • நடைமுறையில்
  • சிறையிருப்புக்கு முன்பாக யூத வரலாற்றிலே
  • சிறையிருப்புக்கு பின்பாக யூத வரலாற்றிலே
  • தீர்க்கதரிசன ஆகமங்களிலே
  • சுவிசேஷ நூல்களில்
  • அப்போஸ்தல உபதேசங்களில்
  • பிரமாணமும், கிருபையும்
  • ஆசீர்வாதம்
  • நீதியின் விளைச்சல்

பிரமாணம் நமக்கு தசமபாகத்தை போதிக்கவில்லை. பண்டைய காலத்தில் அது பழக்கத்தில் இருந்தது. வனாந்தரத்தில் கர்த்தர் இந்த பழக்கத்திற்கு உண்டான ஒழுங்கு முறைகளை விதைக்கிறார்.

உபாகமம் 12: 5,13 கூறுகிறது
5. உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,
13. கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

உனது தசமபாகத்தை கண்ட இடமெல்லாம் கொடுக்காதே . அந்த இடத்தை நாடி அந்த அங்கே சென்று தசமபாகத்தை கொடுக்க வேண்டும். கர்த்தர் உனக்காக குறித்துள்ள இடத்தில் சென்று கொடு. உனக்காக கொடுக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம் உண்டு. அவருடைய இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பனிடத்தில் கொண்டு செல்கிறார். ஸ்தாபனத்திற்கு உயிர் இல்லை. மேய்ப்பனுக்கு ஜீவன் உண்டு. அவர் தான் உன்னை நடத்த முடியும். ஒரு காலகட்டத்தில் மார்ட்டின் லூதரை தேவன் பயன்படுத்தினார். அவர் சத்தியத்திற்காக நின்றார்.

  • தசமபாகம் கர்த்தருக்கு உரியது
  • அது பரிசுத்தமானது
  • அது மீட்டுக்கொள்ள கூடியது
  • அது உங்களுடைய
  • தெரிந்தெடுத்தலாய் இருக்கக் கூடாது
  • அது மாற்ற முடியாத ஒன்று
  • அது ஆசரிப்புக் கூடாரத்தில் கூடி
  • வருகிறவர்களுக்கு கொடுக்கக் கூடிய சம்பளம்
  • தசமபாகத்தை கர்த்தர் உனக்காக குறித்துள்ள இடத்தில் சென்று கொடு.
  • 10 – ல் ஒன்று கர்த்தருக்கு கொடுக்க வேண்டும்.

அவர்கள் தசமபாகத்தை மூன்றாக பிரித்தார்கள்.

  • முதலாவது கர்த்தருடைய தசமபாகம்
  • பண்டிகைக்கால தசமபாகம்
  • ஏழைகளின் தசமபாகம்

பழைய ஏற்பாட்டில் உள்ள வாக்குத்தத்தங்கள் வேண்டும் என்று நாம் சொல்லும் பொழுது, தசமபாகத்தை குறித்து பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறதை, நாம் ஏற்றுக் கொள்ள வேண்டாமா? தசமபாகத்தை புதிய ஏற்பாடு-பழைய ஏற்பாடு என்று பிரிக்க முடியாது. அது ஆதி முதற்கொண்டு மனித பழக்கமாய் இருக்கிறது.

உங்களுக்கு ஆசீர்வாதம் வேண்டுமா?
விதைத்தால் அறுப்பீர்கள்
இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்.
நீதியின் விளைச்சலை காண வேண்டுமா?
உங்களது விதையை
நீதி பரனின் பாதத்தில் விதைத்து விடுங்கள்
நீதியின் விளைச்சலை பெற்றிடுங்கள் !
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!! ஆமென்.

 

Part 2 | பாகம் 2

Tamil Message – தமிழ் தேவ செய்தி

Bilingual Message – English and Tamil Message – தமிழ் மாற்றும் ஆங்கில தேவ செய்தி

 

நாள்: 14.03.2021

தலைப்பு: நீதியின் விளைச்சல் – 11

போதகர்: முனைவர் இராபர்ட் சைமன்.

கடந்த வாரம் முதற்கொண்டு நாம் தசமபாகம் குறித்து தியானித்து வருகிறோம். ஆதியாகமம் 14:20 – ல் முதன் முதலாக தசமபாகம் குறித்து வருகிறது.

ஆதியாகமம் 14:20 – …. கூறுகிறது
…… இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

இங்கே முதன்முதலாக மெல்கிசேதேக்குக்கு, ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான் என்று பார்க்கிறோம். வேதத்திலேயே தசமபாகம் என்ற வார்த்தை 40 முறை வருகிறது. பழைய ஏற்பாட்டில் 32 தடவையும் புதிய ஏற்பாட்டில் 8 முறையும் தசமபாகம் என்ற வார்த்தை வருகிறது.

வேதத்தில் உள்ள உபதேசங்களை குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. இரட்சிப்பைக் குறித்து, நகை அணிந்து கொள்வதை குறித்து, ஞானஸ்நானம் பெறுவதை குறித்து, தசமபாகம் கொடுப்பதை குறித்து பல்வேறு போதனைகளை குறித்து, பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. மார்க்கபேதங்கள் நல்லதுதான். அப்பொழுதுதான் நல்ல கருத்துக்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். பண்டைய காலத்தில், யூதர்கள் மாத்திரமல்ல. இஸ்ரவேலர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் பத்தில் ஒரு பங்கை கொடுத்தார்கள்.

ராஜாவினுடைய பண்டகசாலைக்கு அவர்களது விதைப்பின் பலனை கொண்டு வரவேண்டும். அது பஞ்ச காலங்களில் உதவியாயிருக்கும். அவர்கள் தேசமாய் மாறும்போது, அவர்களுக்கென்று ஒரு அரசியல் கட்டமைப்பு வருகிறது. அநேக நாடுகளின் ஐக்கியம், இன்று ஒரு தேசமாக மாறி இருக்கிறது. அப்பொழுது ஒரு அரசியல் சாசனம் தேவைப்படுகிறது. எல்லாவற்றை குறித்தும் விவிலியம் கூறுகிறது.

நீங்கள் ஒரு தேசமாய் மாறும்போது தசமபாகம் கொடுப்பதை குறித்து, வசனித்து சொல்ல வேண்டும். ஊழியர்களுக்கு வேறு எந்த விதத்திலும் வருமானம் இருக்கக்கூடாது. ஏறெடுத்து படைக்கப்படும் படைப்புகளை தவிர, வேறு எதுவும் அவர்கள் பெறக்கூடாது. அவர்கள் உனக்கு (ஊழியர்களுக்கு) கொடுக்கவில்லை. கர்த்தருக்கு கொடுக்கிறார்கள். கர்த்தருக்கு கொடுப்பதற்கு கரம் வேண்டும்.

 

  • எபிரேயத்தில், தசமபாகத்தை, அவர்களது கையில் இருந்து எடுத்துக் கொள்வாயாக என்று இருக்கிறது.
  • எடுத்துக் கொள்ளும்போது, எடுத்துக் கொள்பவர் கை மேலே இருக்கும்.
  • கொடுப்பவரிடமிருந்து பெற்றால், கொடுப்பவர் கை மேலே இருக்கும்.

பெற்றுக் கொள்வது (எடுத்துக் கொள்வது) மேன்மையானதா?

வாங்கிக் கொள்வது மேன்மையாதா? சிந்தியுங்கள்.

வாங்குவதை காட்டிலும், பெற்றுக் கொள்ளுவது கனமான காரியமாக உள்ளது. தசமபாகத்தை பெற்றுக் கொள்பவர்களும், தசமபாகம் செலுத்த வேண்டும். தசமபாகத்தை செலுத்திய பின், மீதமுள்ள தொகையை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டும்.

பழைய ஏற்பாடு அல்ல, புதிய ஏற்பாட்டிலும் செய்ய வேண்டும்.

நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவே இயேசு கிறிஸ்து இப்பூவுலகிற்கு வந்தார்.
நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவே கிருபை நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பிரமாணத்தை நிறைவேற்ற கிருபை நமக்கு பெலனைக் கொடுக்கிறது. மாம்சத்தினாலே, பிரமாணத்தை நிறைவேற்ற முடியாது. கர்த்தர் நமக்கு கிருபையை தந்து உதவி செய்வார்.

  • விசுவாசத்தினால் அவர்கள் பிரமாணத்தை நிறைவேற்றுகிறார்கள்.
  • விசுவாசத்தினால் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
  • விசுவாசத்தினாலே அவன் நீதியில் இருக்கிறான்.

விசுவாசத்தோடு காத்திருப்போம்!
நீதியின் விளைச்சலை விதைத்திடுவோம்!
நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவோம்!
கிருபையின் பெலனை பெற்றிடுவோம்!

அப்போஸ்தலரது தசமபாகம் அடுத்த வாரம் தொடரும்….

 

Part 3 | பாகம் 3

Tamil Message – தமிழ் தேவ செய்தி

 

Bilingual Message – English and Tamil Message – தமிழ் மாற்றும் ஆங்கில தேவ செய்தி

 

நாள் : 21. 03.2021.
தலைப்பு : நீதியின் விளைச்சல் – 111
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.

ஆதியாகமம் 14:20 – ல் முதன் முதலாக தசமபாகம் குறித்து வருகிறது.
… இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

இங்கே முதன்முதலாக மெல்கிசேதேக்குக்கு, ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான் என்று பார்க்கிறோம்.
வேதத்தில் உள்ள போதனைகளை குறித்து அநேக மார்க்க பேதங்கள் உண்டு. மார்க்கபேதங்கள் நல்லதுதான். அப்பொழுதுதான் நல்ல கருத்துக்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
1 கொரிந்தியர் 11: 19 கூறுகிறது
“உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்க பேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்க வேண்டியதே”.

யூதர்களுடைய பழக்கத்தை பார்த்தோம். எப்பொழுதெல்லாம் எழுப்புதல் இருந்ததோ அப்பொழுதெல்லாம் தசமபாகம் கொடுத்தார்கள். பின்மாற்றம் அடைந்தபோது தசமபாகம் செலுத்துவதை நிறுத்திவிட்டார்கள். நெகேமியா வந்துதான் அதை புதுப்பித்தார்.

“நியாயப்பிரமாணத்தை அழிக்க வரவில்லை, அதை நிறைவேற்றவே வந்தேன்” என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
முதலாம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சபை முழு வடிவத்தில் இல்லை.

“சபை நடந்துகொள்ள வேண்டிய விதமாவது” என்று பவுல் எழுதுகிறார். அந்நாட்களில் அப்போஸ்தல எழுப்புதலுக்கு நேராக செல்வதை விரும்பினார்கள்.
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ரோம கத்தோலிக்க சபை பிறந்தது. சபை வாக்கியங்கள்தான் மக்களை சென்றடைந்தது. வேதவாக்கியங்கள் மக்களை சென்று சேரவில்லை.
இருபதாம் நூற்றாண்டில் வேதத்திற்கு திரும்பு என்ற ஒன்று வந்தது. சந்திக்கப்படாத இடங்களுக்கு மிஷினரிமார்கள் சென்றார்கள்.

ரோமன் கத்தோலிக்கர்கள், மிஷினரிமார்கள், என்ன சொல்லுகிறார்கள்?
வேதம் என்ன சொல்லுகிறது?
புதிய ஏற்பாட்டில் தசமபாகத்தை குறித்து எங்கே இருக்கிறது?

வேதத்தில் பைபிள் என்ற வார்த்தையே இல்லை. புதிய ஏற்பாட்டில் யெகோவா என்ற வார்த்தையே இல்லை. சத்தியத்தை நாம் கண்டுபிடிப்போம். கண்டறிய வேண்டிய சிந்தையிலே தேடினால் கண்டறிவோம்.
உன் தொழிலில் வந்த ஆதாயத்தில் ஒரு பகுதியை எடு என்று பவுல். கூறுகிறார் அன்றைய நாட்களில் பத்தில் ஒரு பங்கை ப்ரதிஷ்டை பண்ணப்பட்ட பணமாக பிரித்து வைப்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு பழக்கமாக இருந்தது. கிறிஸ்தவர்களாக அவர்கள் மாறும் முன்பே இந்த பழக்கம் அவர்களிடம் இருந்தது. இந்த ஆவிக்குரிய வரம் நமக்கு வேண்டும்.
ஒரு ஸ்தாபனத்தை அல்ல. தேவன் ஒரு தனிமனிதனை தேடுகிறார்
ஒரு சபையில் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு
வேறொரு சபையில் தசமபாகத்தை கொடுப்பீர்களா?

1 கொரிந்தியர் 16 :2 கூறுகிறது
“நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன் தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன்”.

நான் கர்த்தர். நான் மாறாதவர். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கவே விரும்புகிறார்.
நம்முடைய தசமபாகம், காணிக்கையில், நாம் கவனமாக இருப்போமானால் ஐந்து விதமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.

  • உங்கள் தசமபாக காணிக்கை வானத்தின் பலன்களை திறக்கும் திறவுகோல்.
  • உங்களை அழிக்கிறவர்களை கர்த்தர் அழிப்பார் .
  • உங்கள் கையின் பிரயாசம் அபரிதமாய் ஆசீர்வதிக்கப்படும்.
  • நீ பாக்கியவானாய் இருப்பாய் என்பதை எல்லாரும் காண்பார்கள்.
  • நீங்கள் எல்லாருக்கும் விரும்பப்படத்தக்கவர்களாய் இருப்பீர்கள்.

2 கொரிந்தியர் 8:7 கூறுகிறது
“அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்”.

இந்த கிருபையில் நீங்கள் பெருகவேண்டும். உற்சாகமாய் கொடுங்கள். உங்களுக்கு கர்த்தர் விதைக்க கொடுத்ததையும், நீங்கள் புசிப்பீர்களானால், உங்கள் விதையை எப்படி அவரால் பெருக செய்ய முடியும்?

நீதியின் விளைச்சல் என்றால் என்ன?

சரியான பருவகாலத்தில், சரியான இடத்தில், சரியான முறையில் உங்களது விதையை நீங்கள் விதைத்தால், அவர் வர்த்திக்க பண்ணுவார். உங்களது விளைச்சலைப் பெருக பண்ணுவார். அதுதான் நீதியின் விளைச்சல். தவறான இடத்தில் விதைத்தால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது.

கிருபையின் அடிப்படையில் ஐந்து ஒழுக்க விதிமுறைகளை காணலாம்.

  • ஒழுக்க விதிமுறை: 1- விசனமாய் நீங்கள் கொடுக்காதீர்கள்.
  • ஒழுக்க விதிமுறை: 2- கட்டாயத்தினாலும், தேவை இருப்பதினாலும் நீங்கள் கொடுக்க வேண்டாம்.
  • ஒழுக்க விதிமுறை: 3- உங்கள் மனதில் என்ன நிர்ணயித்துள்ளீர்களோ, அதையே கொடுங்கள்.
  • ஒழுக்க விதிமுறை: 4- உற்சாகமாய் கொடுங்கள்.
  • ஒழுக்க விதிமுறை: 5– முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் தசமபாகத்தை கர்த்தருக்கென்று செலுத்த வேண்டும்.

இயேசு சொன்னாரா? புதிய ஏற்பாட்டில் உள்ளதா? பழைய ஏற்பாட்டில் உள்ளதா? என்று அல்ல. சற்றே சிந்தியுங்கள்.
தசமபாகம் ஒரு தவறான காரியமா?
தசமபாகம் செலுத்துவது அடிமைத்தனமா?

தசமபாகத்தை நாம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் கர்த்தருக்கென்று செலுத்தும்போது, கர்த்தர் நமக்கு அருளும் வாக்குத்தத்தம்:

நீங்கள் என்னுடைய சொந்த ஜனங்களாயிருப்பீர்கள்.
புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உங்களை சிறந்திருக்கும்படி செய்வேன் என்று கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்.
கர்த்தர் சொன்னார்.
கர்த்தர் செய்வார்.
கர்த்தர் வாக்கு மாறாதவர்.

Share with