You Will Blossom Like A Lily – நீ லீலியைப் போல் மலருவாய் ! – Nee Leeliyai Pol Malaruvai – Pr. Robert Simon

You Will Blossom Like A Lily – நீ லீலியைப் போல் மலருவாய் – Nee Leeliyai Pol Malaruvai

நாள் : 29.03.2020
தலைப்பு : நீ லீலியைப் போல் மலருவாய் !
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்

நீ லீலியைப் போல் மலருவாய் எப்போது?

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களாய் நாம் இந்த நாட்களிலே தேவனுடைய பாதத்தில் மன்றாடும்போது, தேவன் நம்மிடத்தில் வைத்திருக்கும் வழக்கிற்க்கு மன்னிப்பு கோரி அழுது, அறிக்கையிட்டு, மன்றாடும்போது

என் அப்பாவுக்கு சொந்த பிள்ளை மீது வழக்கா?

இதோ என் தேவன் நம் மீது தொடுக்கும் வழக்கு.

உன்னிடத்தில் உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப் பற்றிய அறிவும் இல்லை., பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; என்று வேதம் சொல்லுகிறது.

அவருடைய சமூகத்திலே பண்ணின உடன்படிக்கையை மீறினோம். எனவே அவரே நம்மை அடித்தார். ஆனாலும் என்னிடத்தில் உனக்கு சகாயம் உண்டு என்று சொல்லுகிறார். நம்முடைய காயங்களை அவரே குணமாக்குவார். நம்மை நாமே, நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டாலொழிய வேறு வழி இல்லை.

அவரை உனக்கு முன்பாக நிறுத்தி அவர் பாதத்தில் விழுந்து பொருத்தனை பலியை அவரிடத்தில் செய்து வருவோமானால் அவரிடத்தில் சகாயம் உண்டு. இஸ்ரவேலே! உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பினால் அன்பு, சமாதானத்தை ஆசீர்வாதமாக இஸ்ரவேலுக்கு பொழிந்து அவரே பனியாய் நம்மீது இறங்கி லீலி புஷ்பத்தை போல நம்மை மலர செய்வார். லீபனோனை போல வேரூன்றி நிற்கும்படி செய்வார். நாம் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை எந்த சூழ்நிலையிலும் நம்மை அழியாமல் காத்துக் கொள்வார். நம்முடைய அலங்கோலமான வாழ்க்கை அலங்காரமாக வாழ்க்கையாக மாறும்.

நீ லீலியைப் போல் மலருவாய்! எப்போது?

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீ திரும்பும்போது !!!

Share with