Announcement – Latest Updates on Service From 14/02/2021

Announcement – Latest Updates on Service From 14/02/2021

 

கர்மேல் ஆராதனை வேளைகளைக் குறித்த ஒர் முக்கிய அறிவிப்பு!

 

அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையிலும், கடந்த நாட்களில் நமது 3 ஆராதனை பிரிவுகளிலும் கலந்துகொள்ளும் விசுவாசிகளின் வருகையை கருத்தில்கொண்டும் வருகின்ற பிப்ரவரி 14, 2021 (இரண்டாவது ஞாயிறு திருவிருந்து ஆராதனை) முதல் நமது ஆராதனை வேளைகளில் பின்வரும் மாற்றங்களை கொண்டுவர நம் போதகர் எண்ணியுள்ளார்கள். கவனத்துடன் இப்பதிவினை வாசித்து திட்டமிடவும்.

1. பிப்ரவரி 14, 2021 முதல் நமது ஆராதனை வேளைகள்:

முதல் ஆராதனை ஞாயிறு காலை 8 மணி முதல் 10 வரை (தமிழ் வழி) இரண்டாவது ஆராதனை ஞாயிறு முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை (ஆங்கிலம்-தமிழ் வழி)

2. தற்போதைய சனி மாலை ஆராதனை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு பின் நடைபெறாது. சனி மாலை ஆராதனையில் கலந்துகொள்வோர் ஞாயிறு முதல் அல்லது இரண்டாவது ஆராதனையை தெரிவுசெய்திடலாம். கூடுதல் விவரங்களை வரும் சனி 6 மற்றும் ஞாயிறு 7 ஆராதனைகளில் போதகர் பகிர்ந்துகொள்வார்.

3. ஞாயிறு 11 மணி ஆராதனையில் கலந்துகொள்ளும் விசுவாசிகளுக்கு மதிய உணவுவசதி ஒழுங்குசெய்யப்படுகிறது. பேக் செய்யப்பட்ட பாக்ஸில் வழங்கப்படும் இந்த ஆரோக்கியமான உணவுபேக்கட்டுகளை விசுவாசிகள் முன்பதிவு செய்து தங்கள் மனவிருப்பத்தொகையினைச் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

4. பிப்ரவரி 14, 2021 முதல் ஞாயிறு மாலை ஆராதனையும், 7 மணி முதல் 8.30 மணி வரையில், ‘சத்தியத்தின் நேரம்’ (Hour of Truth) என்ற தலைப்பில் கேள்வி-பதில் (Open Forum) வேளையாக நடைபெறும்.

சபை நிகழ்ச்சிகளை குறித்த தகவல்களை, அறிவிப்புகளை அறிந்துகொள்ள நமது Kwality Shares புலனக்குழுவில் (WhatsApp Groupயில்) பகிர்ந்துகொள்ளப்படும் அனைத்து பதிவுகளையும் தவறாமல் படியுங்கள்.

நன்றி.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

 

Share with