Announcements on Watch Night Service & New Year Service 2022

Announcements on Watch Night Service & New Year Service 2022

அன்பான கர்மேலர்களே,

நம்முடைய விழிப்பிரவு ஆராதனை, புதுவருட ஆராதனை பின்வரும் நேரங்களில் நடைபெறும்,

(1) விழிப்பிரவு ஆராதனை:

31-டிசம்பர் 2021 இரவு 10 மணி முதல் 01- ஜனவரி 2022 காலை 02 மணி வரை.

(2) புத்தாண்டு ஆராதனை:

01-ஜனவரி 2022 காலை 09 மணி முதல் 10 மணி வரை.

விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு

31-டிசம்பர் 2021 இரவிலிருந்து 1-ஆம் தேதி ஜனவரி 2022 காலை வரையில் தனிநபர் வாகன போக்குவரத்திற்கு சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது.

ஆனாலும் ஆராதனையில் கலந்துகொள்ள திருச்சபை/தேவாலயம்/ஜெபவீட்டிற்கு வரும் மக்களுக்கு தடை ஏதும் இல்லை என்று அறிகிறோம்.

இருப்பினும், தங்கள் சொந்த வாகனங்களில் (கார்/பைக்/ஆட்டோ) வருவோர் காவல்துறை இடைமறித்தல், சோதனை போன்றவைகளில் அகப்படாமல் இருக்க, பின்வரும் நெறிமுறைகளை தயவுசெய்து கடைபிடிக்கும்படி கனிவுடன் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

1. குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்டாயமாக முகக்கவசம்(Mask) அணிந்திருக்க வேண்டும்.

2. விருந்துகூட்ட ஆடை (Party Wear) போன்ற உடைகளை தவிர்த்தல் நல்லது. ஆராதனை ஸ்தலத்திற்கு ஏற்ற உடை (கூடியதும், வெள்ளை உடை) அணியவும்.

3. விசுவாசிகள் ஒவ்வொருவர் கையிலும் அச்சு வேதாகமம் (Printed Bible) இருக்கவேண்டும்.

மற்றவர்களுடன் இதனை பகிர்ந்திடுங்கள்.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with